பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி.!

சீனாவின் வுகாண் நகரில் துவங்கிய கரோனா வைரஸ் தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கி இருக்கின்றது. இந்த வைரஸ் தாக்குதல் 100 நாடுகளுக்கும் மேல் தாக்கி இருக்கின்றது.

இந்த நிலையில், இந்தியாவிலும் பரவ ஆரம்பித்து இருக்கும் இந்த கொரோனா வைரஸ் இதுவரை 110 பேரை பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இரண்டு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து இருக்கின்றனர்.

தற்போது உலகம் முழுவதுமே கொரோனா வைரஸால் பீதி அடைந்த நிலையில், ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து ஓல்கா குரிலென்கோ தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கின்றார்.

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, நான் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றேன். ஒரு வாரமாகவே எனக்கு உடல் நிலை சரி இல்லை. கடும் இருமல் மற்றும் காய்ச்சலும் இருக்கின்றது. இதை கவனத்தில் கொண்டு உங்களுடைய உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.